படித்ததில் பிடித்தது
=======================================
பெருந்தன்மை கோழைத் தனமல்ல.
--மதுரை பாபாராஜ்
=======================================
நல்ல மனதும் நல்ல சிந்தனையும் இருந்தால்
வாழ்க்கை நன்றாக அமையும்.
========================================
நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது
நீதான் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக நினை.
துன்பம் வரும்போது உனது துன்பம்
மற்றவர்களைவிட சிறியது என நினைத்துக்கொள்
நன்றி:வாழ்க்கை வழிகாட்டிகள்
==========================================
விடைபெறும் வேளைகளில் அன்பான வார்த்தைகளே
பேசுங்கள்.ஒருவேளை நீங்கள் வழ்வில் மறுபடி
சந்திக்காமலே இருக்கவும் கூடும்.
---விக்டர்
===============================================
அப்துல் கலாம் அவர்களுக்கு ஒரு மகான் கூறியது:
===============================================
உனக்கு வாழ்க்கையில் எதிர்பார்த்தது நிறவேறவில்லை என்றால்
நீ வேறு எதற்காகவோ படைக்கப்பட்டிருக்கின்றாய் என்று அர்த்தம்.
வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்.
========================================================
தனிமனித ஒழுக்கம் தலைநிமிர வைக்கும்
--மதுரை பாபாராஜ்.
=======================================================
வலிமை வாய்ந்தது மனம்.
==================================================
யாரிடமும் அதிக எதிர்பார்ப்போ அதிகமாக உணர்ச்சிவசப்
படுதலோ குழம்பிக்கொண்டே இருத்தலோ இவற்றை எல்லாம்
தவிர்த்தாலே மனம் திண்மையாக மாறும்.
============================================================
மரணத்தின் தறுவாயில் சாக்ரடீஸ் கூறியவை:
============================================
உயிரோடிருக்கும்போது மனசாட்சியை மதிக்காமல்
உண்மைக்குப் போராடாமல் இருப்பது மோசமானது
என்பது மட்டும் எனக்குத் தெரியும்.
============================================================
தவறுகளை ஒப்புக்கொள்ளும் துணிவும் அவ்ற்றை
திருத்திக் கொள்வதற்கான விருப்பமும் தான் வெற்றி
பெறுவதற்கான அறிகுறிகள்.
வி.இ.லெனின்
==============================================================